About Us

வாஸ்து – உண்மைக்கு புறம்பானதல்ல - உணர முடிந்த உண்மை

வாஸ்து – உணர முடிந்த உண்மை மனித உடலுக்கு ஆரோக்கியம் எவ்வளவு அவசியமாக தேவைப்படுகிறதோ அதே போல் வசிக்கும் வீட்டிற்கு வாஸ்து மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இப்பிரபஞ்சத்தை காக்கும் பஞ்சபூத சக்திகளான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை அனுசரித்து வாழும் பறவைகளும், மிருகங்களும், அதனதன் வாழ்க்கையில் குறைபடுவது இல்லை, மேற்படி பஞ்சபூத சக்திகளை ஒத்து வாழாமல் இயற்கையை மீறி வாழும் மனிதகுலமே இன்பத்திலும் துன்பத்திலும் மாறி மாறி சுழலுகிறது. இவ்வாறு உழலும் நிலையற்ற வாழ்வை கொண்ட மனிதகுலத்தை வாழும் காலத்தில் மகிழ்ச்சியுடன் வளமுடனும் வாழ இந்த வாஸ்து சாஸ்திரம் வழிகாட்டுகிறது.

இந்த பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள பஞ்சபூத சக்திகளும் சூரிய ஆற்றலின் மின்காந்த அலைகளின் நல்ல சத்தியை தேவையான அளவு வீட்டினுள் வரவழைப்பதும் உருவாகும் தீயசக்திகளை அவ்வப்போது வெளியேற்றவும் தேவையான அமைப்புகளுடன் வீட்டை அமைக்க உதவுவதே வாஸ்துவின் நோக்கமும் தத்துவமும் ஆகும்.

மனிதகுல ஆயுள், ஆரோக்கியம், கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் தொழில், திருமணம், குழந்தை பாக்கியம், ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கைமுறை, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சேமிப்பு, வீண் விரைய செலவுகள், ஒழுக்ககேடு, அவமானத்தினால் ஏற்படும் மனச்சோர்வு போன்றவற்றை வாழும் வசிப்பிடங்களே தீர்மானிக்கின்றன.

ஒரு வீட்டில் ஒருவர் வளமையுடன் வசிப்பதற்கு அவ்வீட்டினுள் நிறைந்த நல்ல சக்திகளும், மற்ற ஒரு வீட்டில் ஒருவர் துன்பங்களுடன் உழலுவதற்கு தீயசக்திகளின் ஆதிக்கமே காரணம் என்பதை வாஸ்துவின் மூலம் உணரலாம்.. வாஸ்து என்பது விளையாட்டல்ல, சூரியனும், எண் திசைகளும் இவ்வுலகில் எற்படுத்தும் தாக்கத்தின் உணர்வே என்பது ஆராய்ந்தறிந்த ஒரு அறிவியல் உண்மை.

நம் ஒவ்வொருவர் மனதிலும் இலட்சிய கனவாக உள்ள வளமான ஒரு இல்லம் நனவாக காண இப்பிரபஞ்சத்தின் மாபெரும் அபூர்வசக்திகளை நம் இல்லத்தில் சரிவர நிரப்பி எல்லாம் விதிப்பயன் என விரக்தியுடன் வாழும் மனித குலத்தை நம்பிக்கையூட்டி வளமுடன் வாழ வாஸ்து சாஸ்திரம் வழிகாட்டுகிறது.,

குடியிருக்கும் வீட்டிற்குரிய வாஸ்து: வந்த பொருள் நிலைக்க வேண்டும் . வியாபார ஸ்தலத்திற்குரிய வாஸ்து: வந்த பொருள் விரைவாக விற்பனை ஆகி லாபம் ஈட்ட வேண்டும். தொழிற்சாலைக்குரிய வாஸ்து: உற்பத்தி திறனை அதிகரிக்க, தொழிலாளர் நல்லுறவைப் பேணி, வெற்றிகரமாக இயக்கி லாபம் ஈட்டவேண்டும். இதை சரியான முறையில் சரியான இடத்தில் வாஸ்துவை செயல்படுத்துவதன் மூலம் உணர்த்த முடியும். வெற்றிபெற முடியும்.

தீராத பிணியை தீர்த்து வைக்கும் ஆற்றல் வாஸ்துக்கு உண்டு, மனைக்கு மேல் மனை வாங்குவதும், மாளிகைக்கு மேல் மாளிகை கட்டுவதும் வாஸ்துவினாலே. கையில் செல்வமிருந்தும் சொந்தமாக ஒரு மனைக்கோ வீட்டிற்கோ மனம் ஏங்குவதும் தற்போதய வசிப்பிட வாஸ்துவினாலே..,

மனையின் அமைப்பில் ஈசானிய மூலை எனும் வடகிழக்கும் கன்னி( நிருதி ) மூலை என்னும் தென்மேற்கும் வீட்டின் பதினாறு வகை செல்வத்தையும், எண் வகை போகத்தையும் நிர்ணயம் செய்கின்றன.

வீட்டினுள்ள பெண்களின் சிறப்பை வடக்கும், தெற்கும், வாயுமூலை எனும் வடமேற்கும் . ஆண்களின் சிறப்பை கிழக்கும், மேற்கும் அக்னி மூலை எனும் தென்கிழக்கும் நிர்ணயம் செய்கின்றன.,

ஒரு குடும்பத்தில் பெண்களுக்கு தக்க வயதில் திருமணமும் ஆண்களுக்கு தக்க வயதில் தொழில் (அ) உத்தியோகம் கிடைப்பதற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட மனையும் அதில் சாஸ்திரத்திற்கு ஏற்றவாறு கட்டப்பட்ட இல்லமுமே காரணம் ஆகும். தாமதமாகும் திருமணம் நடைபெற, தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர் வெற்றி பெற, பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று கூடி மகிழ, குழந்தை செல்வம் வேண்டுமென ஏங்குவோருக்கு மழலைச் செல்வம் கிட்டிட, வெற்றி பெற துடிக்கும் இளைய தலைமுறையின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு மற்றும் தொழில் சிறக்க வாஸ்துவே வாழ்வளிக்க முடியும் என்பது நிருபிக்கப்பட்ட ஒன்று.

வீட்டின் பிரம்மஸ்தானமான மையப்பகுதியில் பாரம் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்வதே சிறப்பு..வீட்டினுள் வரும் பஞ்சபூத சக்திகளில் ஒன்றான வான்வெளி சக்தி பிரம்மஸ்தானம் வழியாகப் பெறப்பட்டு வீடு முழுவதும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இதன் சுழற்சி சிதறாமல் பரவும்போது உடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.

வாஸ்துவை ஏற்றுக்கொண்டோர்க்கு சில ஆலோசனைகள்:

மனை வாங்கும் போது கவனிக்க தக்க சில ஆலோசனைகள்:

கட்டிடம் கட்டுவது அவரவர் பொருளாதார வசதிகேற்ப அமைவது.

அப்படி கட்டப்படுகின்ற வீட்டை அமைக்க சில யோசனைகள்:

வாடகை வீடு, அபார்ட்மென்ட், அரசு குடியிருப்பு ஆகியவற்றில் வசிப்பவர்கள் மற்றும் வாடகைக்கு இருக்கும் வியாபாரஸ்தலத்தில் வாஸ்து குறைபாடுகளை பெங்சூயி எனும் சீனவாஸ்து சாஸ்திர முறைப்படி எளிய வழியின் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளவும் மார்க்கமுண்டு.

மேலும் வாஸ்து எனும் நலம் நாடும் சூத்திரத்துடன் வளம் நிறைந்த ஒரு வீட்டை அமைக்க வாஸ்து வல்லுநரின் ஆலோசனையின் பேரில் மனை வாங்கி வீடு கட்டிக் கொள்வது நற்பலனை அளிக்கும்.

இந்த அபூர்வ சக்தியின் அனுபவ அறிவை பயன்படுத்தி எமது மூலம் தங்களுக்கு வாஸ்து சாஸ்திரப்படி இல்லம் அமைய இறைவனருள் இருந்தால் நிறைவேறுமாக.

வாழ்க வளமுடன் !. எல்லா நலமுடன் !